LDSP திட்டத்தின் கீழ் ரூபா 16.83 Mn நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நெடுங்கேணி முன்பள்ளி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 19.06.2024 அன்று நெடுங்கேணியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு இ.பிரதாபன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு தெ.ரதீஸ்வரன், சபையின் செயலாளர் திருமதி சோ.மணிவண்ணன், சபையின் உத்தியோகத்தர்கள், திட்டத்தின் சமூக கண்காணிப்பு உறுப்பினர்கள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.