சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுடான கலந்துரையாடலானது 2024.05.14 ஆம் திகதி அன்று சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தரகள் சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இதன்போது சனசமூகநிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.